பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில்(திருவெக்கா)உள்ள பொய்கையில்(குளம்)அவதரித்தார்.
- மாதம் – ஐப்பசி
- நட்சத்திரம் – திருவோணம்
- திவ்விய ப்ரபந்தம் – முதல் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய பாஞ்சச்சன்னியத்தின் அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள.
பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில் அருகில் அவதரித்தார்.
- மாதம் – ஐப்பசி
- நட்சத்திரம் – அவிட்டம்
- திவ்விய ப்ரபந்தம் – இரண்டாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின்(கதை)அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
பேயாழ்வார்
பேயாழ்வார் சென்னையையில் உள்ள திருமயிலையில்(மயிலாப்பூர்) அவதரித்தார்.
- மாதம் – ஐப்பசி
- நட்சத்திரம் – சதயம்
- திவ்விய ப்ரபந்தம் – மூன்றாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய நாந்தகம்(வாள்)அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் சம காலத்தவர்கள்.இவர்கள் மூவரும் முதலாழ்வார்கள் ஆவர்.
முன்னொரு காலத்தில் ஒருநாள் பலத்த மழை பெய்ய, பொய்கையாழ்வார் ஒரு குடிசையில் உள்ள இடைகழியில் மழைக்காக ஒதுங்கினார்.அவ்விடத்தில், ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். சிறிது நேரம் கழித்தது, பூதத்தாழ்வார் நுழைந்தார். பின்னர், பேயாழ்வாரும் அங்கு நுழைந்தார்.சிறிது நேரம் கழித்து, அவர்கள் மூவரையும், நான்காவதாக ஒருவர் நெருக்குவதுப் போல் இருந்தது.
நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.பொய்கையார்,
வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை இடராழி நிங்குகவே என்று (முதல் திருவந்தாதி -1)
(கடலினால் சூழ்ந்த இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு,கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்.)
அடுத்து பூதத்தாழ்வார்-
அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் (இரண்டாம் திருவந்தாதி -1)
(அன்பை அகழியாகக் கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்)
பேயாழ்வார்-
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று (மூன்றாம் திருவந்தத்தி -1)
என்றுப் பாடினார்.
(இவர்கள் ஏற்றிய விளக்கில், மூன்றாவது ஆழ்வார் பரம்பொருளாகிய திருமாலை கண்டனர்).
நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர். முதலாழ்வார்கள் மூவரும் திருமாலின் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நிலையில் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தனர்.
ஸ்ரீவத்சன் மிகவும் அருமை மற்றும் இது போன்று வரலாறுகளை நான் படித்ததில்லை… இது போன்று வரலாறுகளை இனி நான் படிப்பதற்கு உதவியாக இருக்கும் …..
நன்றி ஜானகிராம்.